ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறவுள்ளது..
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
முன்னதாக பாரிஜாத மரத்தை அவர் நட்டுவைத்துவிட்டு சிறப்பு பூசைகளில் பங்கேற்கிறார்.