அடித்தளமிட்ட அத்வானிக்கு அழைப்பு இல்லை ?

SHARE

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இவர்களை தவிர ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-அமைச்சர் கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கட்டியார் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பில் பங்கேற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நேரில் பங்கேற்க அழைப்பு இல்லை. டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.

இதைப்போல விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அலோக் குமார், சதாசிவ் கோக்ஜே, தினேஷ் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். சிறப்பு அழைப்பாளராக பாபா ராம்தேவ் கலந்து கொள்கிறார்.


SHARE

Related posts

Leave a Comment