இங்கும்,இன்றும் நிற்கிறார் காமராசர் – மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி : புதிய கல்வி கொள்கையில் தகவல்

SHARE

உமாபதி கிருஷ்ணன்

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவேண்டும் என்று புதிய கல்வி கொள்கையில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.‘


60 வருடங்களுக்கு முந்தைய தமிழக திட்டம்


ஊட்டச்சத்து குறைவாலும், உடல் நல குறைவாலும் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதன் மூலமும், அவர்களுடைய உடல் நலனை மேம்படுத்துவதன் மூலமும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் சத்துமிகுந்த காலை சிற்றுண்டியும் வழங்க வேண்டும். சூடான சிற்றுண்டி வழங்கமுடியாத இடங்களில் உள்ள பள்ளிகளில் சர்க்கரை கலந்த வேர்க்கடலை அல்லது சுண்டல், உள்ளூரில் கிடைக்கும் பழங்கள் ஆகியவற்றை வழங்கலாம். இதன்மூலம் அவர்களுடைய உடல் நலம் மேம்பட்டு கற்றல் திறன் அதிகரிக்கும்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மதிய உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் 11 கோடியே 59 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைவதாகவும், சில மாநில அரசுகள் தங்கள் சொந்த செலவில் அவர்களுக்கு பால், முட்டை, பழங்கள் போன்றவற்றை வழங்குவதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய கல்வி கொள்கை திட்டங்களில் பல திட்டங்கள் தமிழகத்தில் 50,60 வருடங்களுக்கு முன்னரே,காமராஜர் மற்றும அறிஞர் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment