எடப்பாடி முதல் கட்டம்,கமல் இரண்டாம் கட்ட பிரச்சாரம் துவக்கம்

SHARE

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
லாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வேகக்கட்டுப்பாட்டு மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க வேண்டும் என்று எந்தவித நிர்பந்தமும் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு சொல்லியதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. அந்த கருத்து உண்மையில்லை. 10 நிறுவனங்களில் எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் ஜி.பி.எஸ். கருவிகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்த மேலும் 6 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு தான் சொல்லுகிறது. மாநில அரசு ஏதும் சொல்லவில்லை.


.
2021 சட்டசபை தேர்தலையொட்டி எனது சொந்த தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நாளை ( இன்று) முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். ஏனென்றால், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாக உள்ளது. மேலும், தமிழக சட்டசபை தேர்தலில் நிறைய இடங்களில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால் அடிக்கடி இங்கு வரமுடியாது.
இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளின்படி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில் சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதே போல மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வருகின்ற டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் மண்டலங்களில் துவங்க இருக்கிறார்.


SHARE

Related posts

Leave a Comment