குழந்தையை பார்க்கவிடாததால் ஆத்திரம் – இந்திய நர்ஸ் குத்தி கொலை

SHARE

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் மெரின் ஜாய் 26 வயதான இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் வழக்கமாக பணிக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, திடீரென்று மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு உயிர் இழந்தார்.


இது தொடரபாக போலீசார் பிலிப்மேத்யூ (34) என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.


இந்த தம்பதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் மெரின்  மற்றும் அவரின் தாய் பிலிப்பை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், பிலிப் தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த திங்கட் கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்க முடியாது என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிலிப்மேத்யூவை கைது செய்த போலீசார் இவரை கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய மாமியாரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்


SHARE

Related posts

Leave a Comment