german agitation

கொரோனா பெயரால் பறிக்கப்படும் தனி மனித சுதந்திரம்- ஜெர்மனியில் போராட்டம்

SHARE

வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள  கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் , கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.  கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட வர்கள், தங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என தொடர் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஊர்வலத்தில் ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கலந்து கொண்டனர். மாஸ்க் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர்.  10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்னர்.

கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


SHARE

Related posts

Leave a Comment