கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கு பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை, தற்போது சீராக உள்ளது என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நேற்று மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டு மிகுந்த கவலைகிடமான நிலைக்கு சென்ற அவர் இன்று நல்ல நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் 2 நாட்களில் சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்படுவார் என தெரிகிறது.
இந்த தகவல் அவரது ரசிகர்களையும் குடுமபத்தினரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.