தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக, தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் இதுவரை 17 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாவட்டம் முழுவதும் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது