புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் – என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்/
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க ஸ்டாலின்,கல்வி கொள்கை குறித்து, பிரதமர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார். புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டமாக உள்ளது. என தெரிவித்துள்ளார்.
கல்வி சிறந்த தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும் . கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக மௌனம் காக்கக் கூடாது, அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்” என்று தெரிவித்துள்ளார்.