மகாராஷ்டிரம்- குறையாத கொரோனா

SHARE

மும்பை நிருபர்

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சம்

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 8,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  3,00,937- ஆக உயர்ந்துள்ளது. மேலும்,கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 11,596 ஆக உயர்ந்துள்ளது.  மராட்டியத்தில் 1,65,665 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,26,926 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர்.

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, நாட்டிலேயே பிரபலமான விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் விரைவில் வர உள்ள நிலையில், மக்கள் மத நிகழ்ச்சிகள்,  அரசியல் நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகளில் கூட தடை தொடர்ந்து அமலிலேயே இருக்கும் என்று  முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மிக அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்ட தாராவில் தற்போது கொரோனா தொற்று முற்றிலும் விலகிவிட்டது என கூறும் அளவிற்கு வந்து விட்டநிலையில்,மாநிலத்தின் பிற இடங்களிலும் தாராவி மாடலை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 


SHARE

Related posts

Leave a Comment