லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் சவுதியை விட்டு வெளியேற கெடு.

SHARE

ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.    

ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் தாக்குதல்களை நடத்திவருகிறது. 

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. சவுதி அரேபியாவின் எல்லைக்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 
இதற்கிடையில், லெபனான் நாட்டின் தகவல்துறை மந்திரி ஜார்ஜ் குர்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். வெளிப்புற ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஹவுதிக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்கிறனர்’ என தெரிவித்துள்ளார். 
இது, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளின் தாக்குதலை நேரடியாக விமர்சிக்கும் வகையில் உள்ளது. லெபனான் மந்திரி பேசிய வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து, சவுதி – லெபனான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லெபனான் தகவல்துறை மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லெபனானில் இருந்து அனைத்து வகையான இறக்குமதிக்கும் சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. தங்கள் நாட்டு மக்கள் லெபனான் செல்லவும் சவுதி தடை விதித்துள்ளது. அதேபோல், லெபனான் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபியா கெடு வித்துள்ளது. 
சவுதியை தொடர்ந்து அதன் நட்பு நாடான பஹ்ரைனும் தங்கள் நாட்டில் இருந்தும் 48 மணி நேரத்திற்குள் லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளது. இந்த சம்பவத்தால் வளைகுடா நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


SHARE

Related posts

Leave a Comment