செப். 28-ல் அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நடைபெறும் என இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது கட்சி தலைமை.
சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, அ.தி.மு.க., தயாராகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஆலோசனை நடத்தினர்.
கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் கட்சி மேலிடம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வரும் 28-ம் தேதி காலை 9.45 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு..க, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். இது தொடர்பாக உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.கூட்டத்தில் அனைவவரும் தவறாமல் பங்றே்க வேண்டும். என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.