மாவட்டங்கள், மாநிலங்கள் இடையே போக்குவரத்துக்கு தடை வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

SHARE

கொரோனா நோய்த்தொற்று பரவல் நீடிப்பதால் மாநிலங்களில் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. மாநிலத்துக்குஉள்ளேயும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சென்று வரவும் இ-பாஸ் நடைமுறை உள்ளதால் மக்கள் சென்று வருவதிலும், பொருட் கள் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தற்போது 3-ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கும் நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றங்களுக்கு கட்டுப்பாடுகள் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து நீடிக்கக்கூடாது என தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.

3-ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கும் நிலையில், இத்தகைய கட்டுப்பாடுகள் சரக்கு போக்குவரத்தில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்குகின்றன.

மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கூடாது என 3-ம் கட்ட தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது முன் அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் நடைமுறை போன்றவை தேவை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இதை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் சென்று வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் தடையோ அல்லது கட்டுப்பாடோ விதித்தால் அது உள்துறை அமைச்சகம் பிறப்பித்த தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறுவதாகும். எனவே கட்டுப்பாடு தளர்வுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment