சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து நாட்கள் வரை ஆயிரம் நபர்களுக்கு குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 1364ஆக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எல்லா நிலைகளும் திறந்து விடப்பட்டதே இதற்கு காரணம் என்ற போதிலும் பிற மாநிலங்களை ஒப்பிடும் வகையில் இது மிக குறைவான எண்ணிக்கை என்றே கணிக்கப்படுகிறது.
அதே நேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது சென்னை நகரை பொறுத்தவரை அறுதல் தரக்கூடிய விசயமாக இருக்கிறது.