சிறப்புப் பொருளாதார மண்டலாக 600 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்துக்கான மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலாக 600 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்துக்கான மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை, சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கவும் இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் இந்த மசோதாவை, ‘சீன மாகாண மசோதா’ என, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
‘சீனாவிடம் 2,000 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற்று உருவாக்கிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு தாரைவார்த்துள்ளனர். இரண்டாவதாக இலங்கையின் தலைநகரான கொழும்பின் மையப் பகுதியின் புதிய நகரத்தையும் சீனாவுக்கே அளித்துவிட்டதால் வரும் நாள்களில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்’ என, எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன.
‘சீனாவிடம் அளவில்லாமல் பெற்ற கடனுக்கான வட்டியையும், அசலையும் திரும்பச் செலுத்த முடியாமல் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில், 70 சதவீத உரிமையாளராக சீனாவும், 30 சதவீத உரிமையாளராக இலங்கையும் மாறியுள்ளன. தற்போது மீண்டும் 1.4 பில்லியன் டாலர் கடனில் சிறப்புப் பொருளாதார நகரத்தை உருவாக்கி அதையும் சீனா வசம் ஒப்படைக்கிறது இலங்கை. இது இலங்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்’ என, பெருளாதார வல்லுநர்கள் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.