எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற தடை விதிப்பதாக அமெரிக்காவின் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு எதிராக கடுமையாக டிரம்ப் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது போன்ற தடையை உலகில் எந்த நாடும் எந்த அமைப்பிற்கும் எதிராகவும் இது வரை விதித்ததில்லை.
சீனா மேல் உள்ள கோபத்தில் ட்ரம்ப் அரசு இந்த கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.