தமிழகத்தில் முதல் முறையாக 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது கொரோனா பாதிப்பு.

SHARE

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று 62 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,314 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று 5,165 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,07,203 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 43,747 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


சென்னையில் இன்று ஒருநாளில் 1,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தொடர்ந்து 5 ஆயிரத்துக்கு மேல் இருந்த கொரோனா பாதிப்பு முதல் முறையாக 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment