டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம் – ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை

SHARE

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள  கீழமை நீதிமன்றத்தில் இன்று வழக்கமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு  பிரபல  ரவுடி  ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அப்போது மர்மநபர்கள் திடீரென கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

வழக்கறிஞர்கள் உடையில் வந்திருந்த 2 பேர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ஜிதேந்தர் கோகி உயிரிழந்துள்ளர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.  


கோர்ட்டு  வளாகத்தில் நடந்த இந்த  துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோர்ட்டு  வளாகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment