நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து பேசினர். டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர், மோடியை சந்தித்து காவிரி, மேகதாது விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு , மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினோம். தமிழகத்திற்கு பாதகமாக எந்த முடிவையும் அரசு எடுக்காது என பிரதமர் உறுதியளித்தார். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என மத்திய அரசை முதல்வர் இ.பி.எஸ்., வலியுறுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.