முதலமைச்சராக சசிகலாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் சட்ட பேரவை தேர்தலில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது அரசியல் போட்டியாளரான ஒ.பி.எஸ் வாயாலயே இந்த அறிவிப்பை வெளியிடச்செய்து கட்சி தொண்டர்களிடையே தான் தான் தற்போதைக்கு அசைக்க முடியாத தலைவர் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கட்சியில் ஒ.பி.சுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் சரிந்து போனது.