சென்னையில் பத்து ரூபாய் கட்டணத்தில் ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை துவங்கினார் சித்த மருத்துவர் வீரபாபு.
கொரோனா தீவிரமாக பரவியபோது தமிழக அரசின் அழைப்பை ஏற்று கொரோன சிகிச்சைக்கென தனி சித்த மருத்துவமனையை நடத்திய வீரபாபு,கிட்டத்தட்ட 5250 நபர்களை குணப்படுத்தினார்.
இவரது மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட எவரும் உயிரிழக்கவில்லை. இதனால் பிரபலமான மருத்துவர் வீர பாபு தற்போது பரபரப்பான அருணாச்சலம் சாலையில் •( ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு எதிரே) பத்து ரூபாய் கட்டணத்தில்ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும வகையில் சித்தா மற்றும் ஆங்கில மருத்துவர்கள் இணைந்து செயலாற்றும் மருத்துவமனையை துவக்கியுள்ளார். மாலை நேரங்களில் இந்த மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது.
இதுபற்றிய செய்தி படம் .