21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம்

SHARE

சென்னை: தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு


* உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

* பள்ளிக்கல்வித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்

* சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்

* வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலா சாமி

* ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலராக கே.கோபால் நியமனம்

* பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மை செயலராக சந்தீப் சக்சேனா நியமனம்.

* வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை முதன்மை செயலராக குமார் ஜெயந்த்.

* நகர்புற வளர்ச்சி, வீட்டுவசதித்துறை முதன்மை செயலராக ஹித்தேஷ் குமார் மக்வானா நியமனம்

* நெஞ்சாலை மற்றும் துறை முகம் முதன்மை செயலராக கார்த்திகேயன் நியமனம்

* வேளாண், விவசாய நலன்துறை ஆணையாளராக சமயமூர்த்தி நியமனம்

* சுற்றுலா, கலாச்சார, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலராக சந்திரமோகன் நியமனம்

* தொழிலாளர் நலம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி செயலராக கிர்லோஷ்குமார் நியமனம்

* சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலத்துறை செயலாராக அருண்ராய் நியமனம்.

* போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலராக தயானந்த் கட்டாரியா நியமனம்

* ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலராக மணிவாசன் நியமனம்.

* பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறபட்டோர் நலன் சிறுபான்மை நலத்துறை செயலராக கார்த்திக் நியமனம்

* எரிசக்தித்துறை முதன்மை செயலராக தர்மேந்திரபிரதாய் யாதவ் நியமனம்

* பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலராக மைதிலி ராஜேந்திரன் நியமனம்.

* சமூகநலன் மற்றும் மதிய உணவு திட்டத்துறை செயலராக ஷாம்பு, கலோலிகர் நியமனம்.

* மாற்றுத்திறனாளி நலத்துறை செயலராக லால்வீனா நியமனம்

* கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் காதி துறை செயலராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நடந்துள்ள முதல் பெரிய மாற்றம் இது


SHARE

Related posts

Leave a Comment