இந்தியாவில் 5 மாதங்களுக்கு பிறகு 25 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்பு

SHARE

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,166 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 36,803 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.69 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 437 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,32,079 ஆனது.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.51 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.15 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment