ஆப்கனில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனையடுத்து அந்நாட்டின் பெயர் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமெரிக்க படைகளை அதிபர் பிடன் திரும்ப பெற்ற விதம், திட்டமின்றி படைகளை வாபஸ் வாங்கியது போன்றவை விமர்சனங்களுக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில் இன்று பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய பைடன் , ஆப்கனில் நாட்டை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை’.
மேலும் அல்கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுக்கப்பட்டதாகவும்,எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும் என்றார்.
ஆப்கன் அரசும், படையும் தலிபானை எதிர்க்காத பட்சத்தில் நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது, போரில் அமெரிக்கர்கள் தங்கள் உயிரை பறி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை’ இவ்வாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்
இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து திரும்ப பெற்றதற்காக ஆப்கன் ஆதரவு அமைப்புகள் அமெரிக்காவில் அதிபர் ஜோ பிடனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன.