காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் – 20 பேர்பலி

SHARE

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலைய வாயிலில், இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கன் தலைநகர் காபூலை, தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய பின், அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர்.



காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக, ஆப்கனில் உள்ள அமெரிக்க துாதரகம் எச்சரிக்கை விடுத்தது.

காபூல் விமான நிலையத்தின் மூன்று வாயில்களில் இருந்தும் அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தது.

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் காபூல் விமான நிலையம் தாக்கப்பட வாயப்புள்ளதாக இன்று காலை முதலே எச்சரித்து வந்தனர்.

இந்நிலையில் காபூல் விமான நிலைய வாயிலில் இன்று மாலை இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

இதில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாகவும், மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. ‘இது மனித வெடிகுண்டு தாக்குதல்’ என, ரஷ்யா உறுதி செய்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே மீண்டும் காபூல் விமான நிலையம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment