கேரளாவில் இன்று மேலும் 2,333 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே முதல் கொரோனா தொற்று நுழைந்த மாநிலம் கேரளா, ஆனால் ஊரடங்கை சிறப்பாக கடைபிடித்தது கேரளா. ஆனால் கொரோனா தொற்றை பொறுத்தவரை எத்தனை நாட்கள் ஊரடங்கை கடை பிடித்தாலும் ஊரடங்கை விலக்கினால் தொற்று பரவல் அதிகரிப்பது அனுபவத்தில் தெரிய வருகிறது.
இதே தான் கேரளத்திலும் நந்து வருகிறது.கடந்த மாதம் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,231 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது,
உயிரிழப்புகளை பொறுத்தவரை கேரள மாநிலத்தில் தான் மிக குறைந்த எண்ணிக்கையில் பதிவாகிறது. இது மகழ்ச்சியளிக்க கூடிய ஒன்று .மாநிலத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 1,217 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,611 ஆக உள்ளது. தற்போது வரை 17,382 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.