கர்ப்பிணிக்காக இயக்கப்பட்ட ‘மெட்ரோ’ரயில் – குவியும் பாராட்டுகள்

SHARE

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, அவர் ஒருவருக்காக மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஐதராபாத், ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிகிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது; நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.இந்த நிலையில், 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார்.

பிரசவ வலியால் துடித்த அவர், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார். வழக்கமாக இரவு, 9:00 மணியுடன், மெட்ரோ ரயில் சேவை முடிவடையும்.கர்ப்பிணியின் நிலையை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் உடனடியாக அனுமதியளிக்க, கற்பினி பெண் ஒருவருக்காக மட்டும், சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது. இந்த செயல், பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.


SHARE

Related posts

Leave a Comment