பெரியாருக்கு சிலை என்பது அபத்தம் – பினாங்கு மாநில துணை முதல்வர்

SHARE

பெரியாருக்கு சிலை என்பது அபத்தம் தந்தை பெரியார் இன்று உயிரோடு இருந்தால், திருச்சியில் 135 அடியில் எழுப்பப்பட போவதாக சொல்லப்படும் தனது சிலைக்கு அனுமதி கொடுப்பாரா என மலேசிய நாட்டின்,.பினாங்கு மாநில துணை முதல்வர் ராம சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸ் ஏசியா தலைமை செய்தி ஆசிரியருக்கு அவர் அனுப்பியுள்ள குறிப்பில் இந்த கண்டனத்தை பதிவு செய்துள்ளார்‘

பெரியார் அல்லது ஈவேரா, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் சமூக மறுமலர்ச்சியை முன்னெடுக்க அவர் தோற்றுவித்தது திராவிடர் கழகம். பிராமண ஆதிக்கம், சாதிய அத்துமீறல்கள், ஆலயத்துக்குள் நுழைய தடை, தொழில் வாய்ப்புகளில் மறுப்பு என சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்ட அட்டூழியங்களையும், பெண் அடிமைத்தனத்தையும் கடுமையாக எதிர்த்தவர் பெரியார் என பேராசிரியர் ராமசாமி நினைவு கூர்ந்துள்ளார்.

தனது போராட்ட வாழ்க்கை முழுதுமாய், பகுத்தறிவை மட்டுமே முன்னிறுத்தி மூட நம்பிக்கைகள் புறந்தள்ளி, ஆணதிக்க திணிப்பு முறையயும் உடைக்க தொடர்ந்து செயல்பட்டவர் பெரியார் என தெரிவித்துள்ள திரு,ராமசாமி பெரியார் ஒன்றும் கடுமையான இறை மறுப்பாளர் அல்ல; அவர இறை நம்பிக்கையின் பெயரில் நடக்கும் அநீதிகளை ஏற்காதவர், பகுத்தறிவாளர் என தெரிவித்துள்ளார்‘

பெரியார், வேதிய மதத்தை அடிப்படையாக கொண்டு பிராமணர்கள் சமூக, அரசியலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கடுமையாக எதிர்த்தார். பல்லாண்டு காலம் புரைந்தோடியிருக்கும் வழக்கங்களை மாற்றுவதும், மறுப்பதும் அவ்வளவு இலகுவான காரியம் இல்லை. பகுத்தறிவு சிந்தனைகளை பெரியார் கடுமையான போக்கில் முன்னெடுத்ததுக்கு காரணம், பிராமணர் அமைப்புகள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் அமைப்புகள் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பை, அவர்களை விட கடுமையாக எதிர்த்தால்தான் அவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்பது தான் என நினைவு கூர்ந்துள்ள திரு ராமசாமி தான். எனது புரிதல் சரியானது என்றால், தனது புகழை விட்டுச்செல்ல வேண்டுமென்ற நோக்கமில்லாத, தனிமனித துதிபாடல்களை விரும்பாத ஒருவருக்கு, அவரது நினைவாக சிலை வைக்க வேண்டும் என்பதே அவரது கொள்கைகளை குழித்தோண்டி புதைக்கும் செயல் போன்றது என பதிவிட்டுள்ளார். பகுத்தறிவாளர் ஒருவருக்கு, அவரது நினைவாக சிலை எழுப்புகிறோம் என்பது தலைகீழான செயலாகும். அவரது வாழ்வு முழுதும் பேசிய கொள்கைகளுக்கு முற்றும் மாறானது. ஆனால், திராவிட கழகத்தை வாரிசு போல சொந்தம் கொண்டாடும் ஒருவர், அவ்வமைப்புக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர், தமிழர் மண்ணில், பெரியாருக்கு 135 அடியில் சிலை வைக்கிறேன் என புறப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழ்மண்ணில்தான் ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தும், மூடநம்பிக்கையை முழுதாக புறந்தள்ள போராடினார் பெரியார். ஆனால், மூடத்தனத்தை ஒதுக்க சொன்ன பெரியாருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து சிலை வைக்கிறேன் என்பது பகுத்தறிவான செயலா? எனவும் திரு ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னை பொறுத்தவரை, பகுத்தறிவு இயக்கம் என்பது, பெரியார் மறைவுடன் தமிழ்நாட்டில் நின்றுவிட்டது. தனது வாழ்நாள் முழுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார சுதந்திரத்துக்காக மட்டுமே போராடியவர் பெரியார். பின்னாளில் சில அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டில் பெரியாரின் கொள்கைகளை சொல்லி, தனக்கும், குடும்பத்துக்குமான இலாபத்தை குவிப்பதில் கவனம் செலுத்தினர் என கடுமையாக ளசாடியுள்ளார் திரு ராமசாமி‘


SHARE

Related posts

Leave a Comment