தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது காய்கறி, உணவகம் உள்ளிட்ட கடைகளை இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம் என தமிழக அரசு சார்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், இதில் நேரத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நேர நீட்டிப்பானது காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் பொருந்தும்.