பெண் கலெக்டருக்கு தண்ணீருக்கு பதில் சானிடைசர்-சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

SHARE

புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த புன்கிழமை  மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் உள்பட அனைவருக்கும் அலுவலக ஊழியர்களால் காபி, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் பூர்வா கார்க் தனக்கு வழங்கப்பட்டு இருந்த குடிநீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க முயன்றார். அப்போது அந்த பாட்டிலில் இருந்து ஒருவிதமான வாசனை வீசியதால் கலெக்டர் சுதாரித்துக் கொண்டு அதனை அருந்த வில்லை.
அதன்பின் கலெக்டருக்கு வழங்கப்பட்ட பாட்டிலை பார்த்த போது ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட அதில் கிருமி நாசினி (சானிடைசர்) நிரப்பப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி தெரியவந்ததும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கலெக்டர் பூர்வா கார்க்கும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக சிறப்பு அதிகாரி சுரே‌‌ஷ்ராஜ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஆலோசனை கூட்டத்தின் போது மற்ற அதிகாரிகளுக்கு சரியான குடிநீர் பாட்டில் கொடுத்து இருக்கும் போது கலெக்டருக்கு மட்டும் கிருமிநாசினி நிரப்பிய பாட்டில் மாறியது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 284 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் நச்சு திரவம் இருக்கும் இந்த குடிநீர் பாட்டிலை, உணவு பாதுகாப்புத் துறையிடம் பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது,” எனக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கிருமி நாசினி  குடிநீர் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க வெள்ளிக்கிழமை சிபிசிஐடிக்கு மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார்.


SHARE

Related posts

Leave a Comment