ரு சில ஊடகங்களில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செய்தி வெளியிடப்படுவது நாட்டுக்கு அவப்பெயரை விளைவிக்கும்’ என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று தொடக்க காலத்தில், தொற்று பரவல் அதிகரிப்புக்கு தப்லீக் ஜமாத் மத கூட்டமே காரணம் என, செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவில்,
அதிகாரமிக்கவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே செய்தி இணையதங்கள் கேட்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் அமைப்புகளுக்கு எதிராகவும் தாங்களுக்கு தோன்றியதை எழுதுகிறார்கள். பேஸ்புக், யூடியூப், டுவிட்டர், இணையதளங்களுக்கு பொறுப்பே இல்லை.
நாட்டில் நடைபெறும் அனைத்தையும் சில ஊடகங்கள் மதவாத ரீதியாக காட்டுகின்றன. இதுதான் இங்கு பிரச்சனை. நாட்டுக்கு இதனால் அவப்பெயர் ஏற்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஊடகங்களில் மதவாத கருத்துகள் மட்டுமல்ல, திட்டமிடப்பட்ட பொய்யான செய்திகளும் வெளியிடப்படுகின்றன’ என்றார்.
தப்லீக் ஜமாத் மத கூட்டத்துடன் கோவிட் பரவலை தொடர்புப்படுத்தியது குறித்து, ‘யூடியூப் பார்த்தால், உங்களுக்கே புரியும் பொய் செய்திகள் எப்படி பரப்பப்படுகிறது என்று. ஆனால், இதற்கு எதிராக இணையதளங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என, கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், தப்லீக் ஜமாத் தொடர்பான பொய்யான செய்திகளை தடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. பின், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.