இலங்கை “தமிழர் பூமி” – நாடாளுமன்றத்தில் விக்னேஷ்வரன் உரை – தமிழர்கள் மகிழ்ச்சி சிங்கள கட்சிகள் அதிர்ச்சி

SHARE

உமாபதி கிருஷ்ணன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் நாள் கூட்டத்தில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று பேசியிருந்தார்.

“இலங்கை நாடானது தமிழர் பூமி” எனவும், “இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்” , “தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி” எனவும் விக்னேஷ்வரன் நேற்று உரை நிகழ்த்தியிருந்தார்.

சமீப காலத்தில் நாடாளுமன்றத்தில் உண்மையான இது போன்ற கருத்துக்களை யாரும் முன் வைத்ததில்லை. அசுர பலத்துடன் ராஜபக்சே அரசாங்கம் ஆட்சி நடத்தும் இந்த நேரத்தில் விக்னேஷ்வரன் துனிந்து தனது கருத்தை முன் வைத்தது சிங்கள கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று கூடியதும், மனுஷ நாணயக்கார ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிப்பேசினார்.

நாடாளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்துகொள்ளும் போது இந்த நாட்டில் தனி நாடு நிறுவுவதற்கோ, அவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி பங்களிப்பு வழங்கும் நடவடிக்கைகளிளோ ஈடுபட மாட்டோம் என்ற அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து “அனைவரும் இலங்கையர்கள்” என்ற ரீதியில் ஒன்றிணைந்து பயணிக்க நினைக்கும் இந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்து மிக மோசமானது” என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை, தமிழர் பூமி எனவும், இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும், தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி எனவும் சி.வி.விக்னேஷ்வரனினால் கூறப்பட்ட கருத்து, நாடாளுமன்ற பதிவிற்கு சென்றுள்ளதாக கூறிய அவர், அது தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பூமி யாருடையது, யார் பூர்வீக குடிகள் என்பது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்கலாம் என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

எனினும், அந்த நிலைப்பாடானது, இலங்கை நாடாளுமன்ற பதிவேட்டில் பதிவாகக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்தை பதிவேட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுஷ நாணயக்கார சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக ஆராயப்படும் என கூறியுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment