மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பு உள்ளது. ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.