ஆப்கனுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை-இலவசமாக வழங்குகிறது இந்தியா

SHARE

ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது.

‛‛தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யப்படும். ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய நட்பு உறவு மற்றும் அணுகுமுறையை தொடர்ந்து சுமூகமாக வழிநடத்தும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய மறுத்து வருகின்றன. மேலும் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிகளினாலும், உள்நாட்டுப் போரினாலும் உணவு தானியங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு பன்னாட்டு அமைப்புகளும், வளர்ந்த நாடுகளும் அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் ஆப்கானிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை நன்கொடையாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது. கோதுமையை பாகிஸ்தானின் அதாரி-வாகா எல்லை வழியாக அனுப்ப பாகிஸ்தான் அனுமதிக்க மறுப்பதால் கப்பலில் சாபஹார் துறை முகம் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டு பின் ஆப்கானிஸ்தானுக்கு சாலை மார்க்கமாக அனுப்பப்பட்டது.

‛‛ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவுபவர்களுக்கு தடையற்ற மற்றும் நேரடி அணுகுமுறையை இந்தியா விரும்புகிறது. இந்த உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாகுபாடின்றி போய் சேர வேண்டும்,” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment