உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது : ஜி-ஜின் -பிங்

SHARE

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் உறவு மோசமாகி வருகிறது.சமீப ஆண்டுகளாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில் ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை மீட்டெடுக்கப்பட்ட 50-வது ஆண்டு நிறைவை குறிக்கும் மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்காவை மறைமுகமாக சாடினார். மாநாட்டில் அவர் பேசுகையில் “ஐ.நா. சபையின் அதிகாரத்தையும் நிலைப்பாட்டையும் நாம் உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மறைமுக குறிப்பிடும் வகையில் “சர்வதேச விதிகளை 193 ஐ.நா. உறுப்பு நாடுகளால் மட்டுமே உருவாக்க முடியும். தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் தீர்மானிக்க முடியாது. சீன மக்கள் எப்போதும் ஐ.நாவின் அதிகாரத்தையும் புனிதத்தையும் நிலைநிறுத்தியுள்ளனர் , ஐ.நாவுடனான சீனாவின் ஒத்துழைப்பு கடந்த 50 ஆண்டுகளாக சீராக ஆழமடைந்துள்ளது” என அவர் கூறினார்.

உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது என்கிற மிகப்பெரிய தத்துவத்தை ,நடைமுறை உண்மையை தெளிவாக புரிந்து வைத்துள்ள சீனா,தனது அண்டை நாடுகளை சீண்டுவது ஏன் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்


SHARE

Related posts

Leave a Comment