துவங்கியது துப்பாக்கி கலாச்சாரம்- எம்எல்ஏ கைது

SHARE

திருப்போரூர்.சென்னை

சென்னை நகர் மற்றும புறநகர் பகுதியில் நில மதிப்பு வின்னை ஏட்டியுள்ளது. இதனால் கடந்த பல வருடக்ளாகவே பலபிரச்சனைகள் எழுந்து வருகின்றன. கட்டபஞ்சாயத்து ரவுடிகளுக்குள் மோதல் என பணத்திற்காக பல விரும்பதகாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதணிடையே இன்று கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் எம்.எல்.ஏ.வின் தந்தை மற்றும் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் கீரை வியாபாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நிலம் வாங்குவது விற்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு

இந்த நிலையில் அந்த நிலத்திற்கு இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் சென்றுள்ளார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.மேலும் இந்த மோதல் குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த எம்எல்ஏ இதயவர்மன் தான் பாதுகாப்பிற்கு வைத்திருந்த கைத்துப்பாகியால் சுட்டதில் எதிர் தரப்பினர் காரில் குண்டு பாய்ந்தது.

சும்மா போன கீரை வியாபாரி படுகாயம்

அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது ஒரு குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இரு தரப்பினர் மோதலில் 3 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். லட்சுமிபதி வைத்திருப்பது உரிமம் பெற்ற துப்பாக்கியா? என்று விசாரணை நடத்தினார். மேலும் எம்எல்ஏ இதயவர்மனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பதற்றத்தை தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment